Thursday, March 3, 2011

வீம்பு...

கண் விழிக்கும் காலை அனிச்சையாய்


உனை அணைக்கும் கைகள்!!



தேனீர் கேட்டு இரைந்த பின்

உதடு கடிக்கும் பற்கள்!!



சுகமாய் வெந்நீர் குளியளின்றி

வெட வெடக்கும் உடம்பு!!



காலை உணவு எண்ணி இப்போதே

கலக்கமுறும் வயிறு!!



கையசைத்து வழியனுப்ப ஆளின்றி

கிளம்ப மறுக்கும் வாகனம்!!



போதும் போதும் என்மேல் கோபமும்

உன் தாய் வீட்டு பாசமும்...

வீம்பு மறந்து மனைவி தேடி

தானாகவே நடக்கின்றன கால்கள்!!!...