சோம்பல் முறித்து, கண்கள் கசக்கி ,
கட்டில் விடுத்தது, காலணி அணிந்து,
வெளிப்படுவான் ஒரு நத்தைபோல்!
மணி பத்தாச்சா? பொய்யாய் வியப்பான்,
புழுதி பறக்க படிகள் கடந்து,
தெருவிலிறங்கி நடப்பான்!
1/2 தேனீர், வெண்குழல் வற்றி,
ஓசி பத்திரிக்கை, ஓரிரு விவாதம்,
இனிதே முடித்து அறை திரும்புவான்!
நேர்காணல் இன்றா? தேர்வேதும் உண்டா?
யோசனை, விசாரிப்பும் பலமாய்,
பணிக்கான கனவில் வாழ்வான்!
ஞாயிறு, திங்கள் பேதமின்றி,
வாழ்க்கை போகும் பாதை எண்ணி,
நிதம் பீச் மணலில் தவமிருப்பான்!
பணமும் பாசமும் தொலைவிலிருக்க,
மனமும் மானமும் போய்திரும்ப,
வீட்டுக்கடனும், தங்கை முகமும்,
வெளிநாடு என்னும் முடிவைத்தரும்,
திருவல்லிக்கேணி எங்கும் இப்படியே!
எத்தனையோ 'இவன்'கள் இங்கே இப்படியே!
ஓடுகிறது காலமது இப்படியே!
முடிந்திடுமோ 'இவன்' வாழ்க்கை இங்கே இப்படியே??...
Subscribe to:
Post Comments (Atom)


Nammavar Nilaimai Nandraage vilangach chonnay
ReplyDelete"Ivan" padum paatai Iyalpage vilakkich sonnaay
Panam thaedum ivargalin vaalkai- nadai pinam
Endru uraikech sonnaay..
Ingaey Ivanuku...
Uyirundu unarvillai
vili undu vidiyal illai
panam undu paasam illai
Panjanai undu thookam illai
unavil Rusiyirundhum vaalvil inimai illai
Kanavil avargalai kandathanaal
Indru vidiyalai Veruthavanage
innum un Payanathil unai thodarnthavanage
Aduthu undhan ninaivalaiglikkage Kaathirukiraen..........................