தினம் தினம் காலை
இதே போராட்டம்தான்!
அவள் ஓரப்பார்வை, குறு நகை கிட்டாவிடில்,
அன்றைய பொழுது வீண்தான்!
புன்னகை நீளாதா?
முறைசொல்லி அழைக்க மாட்டாளா?
காத்திருந்தே அலுவல் வாகனம் மறப்பேன்!
இதோ இன்றும்
கடிகாரம் பார்த்தபடி காத்திருக்கிறேன்,
கள்ளி அவள் இன்னும் துயில் எழவில்லையோ?
பொறுமையின்றி எட்டிப்பார்க்கையில்,
கனவுக் குதிரையில் மிதந்தபடி,
நான் காத்திருப்பது அறியாமல்,
உறங்குகிறாள் என் பிள்ளை!..
Subscribe to:
Post Comments (Atom)


Un Poraatangalai unare mudindhavanai Un poraatam vaalnalmuluvathum thodare ulapoorvamai piraarthanai seythvanai
ReplyDeleteThaedalgaludan......
இது எழுத்து.,
ReplyDeleteமிக நன்று....
அந்தப்போரட்டத்தை எல்லாரையும் விரும்பி ஏற்கத்தூண்டும் நற்கவிதை..