Friday, December 11, 2009

மகள்

குளிர்மலர் முகமதில்,
குறுநகை கனியே!
பஞ்செனும் கையதில்,
நகமது பிறையே!

சுடர்விழி பார்வையதில்,
ஈர்ப்பது விசையே!
வளி செல்லும் நாசியதில்,
கவர்வது கனிவே!

எங்கள் தேவதை இவளே!
எங்கள் தேவையும் இவளே!

இனியொரு பிறப்பினும்,
இவளே மகளாய்!
அமைந்திட வரமே,
அருள்வாய் இறைவா!...

2 comments:

  1. arrumai,
    eenra pillaiyai thalatuvathu inimai,
    athuvum
    eendra magalai thalatum passa migu thanthaiku
    pallil itta then pol suvai.

    peyar solla aanmagan vendum.
    thai thanthai passathai kadaisi varai solla magal vendum.

    pen pillai enbavall pettravarukku selvam, kondavanukku varam.

    ReplyDelete
  2. Thank you for your valuable comment,
    keep reading and post your comments.

    ReplyDelete